1 இறைவன் என்பதன் கருத்து:

 1 இறைவன் என்பதன் கருத்து:

1 இறைவன் என்பதன் கருத்து:

{அவனே அல்லாஹ். (அவன்) படைப்பவன்; உருவாக்குபவன்; வடிவமைப்பவன்;}
[ஸூரதுல் ஹஷ்ர் 24].
அல்லாஹ் அவன்தான் படைப்பாளன் அவன் உலகில் இருக்கக்கூடிய அனைத்துப் பொருட்களையும் படைத்தான் அவனுடைய நுட்பத்தைக் கொண்டு தேவையற்றவைகளை நீக்கினான். அவைகளுக்கு அவனுடைய புகழைக் கொண்டும் நுட்பத்தைக் கொண்டும் உருவமும் வழங்கினான். இந்த மகத்தான பண்புகளிலிருந்து அவனை நீக்கவும் முடியாது அவன் நீங்கவும் மாட்டான். அல்லாஹ் இறைவனாவான்- அவன் அனைத்து அடியார்களையும் இறட்சிக்கக் கூடியவனும் அடக்கியாளக்கூடியவனும் ஆவான். மேலும் அவனுடைய அருட்கொடைகள் பலவிதமாகும். இந்த வளர்ப்பு அவர்களுடைய உள்ளங்களையும் ஆத்மாக்களையும் குணங்களையும் சீர்த்திருத்துவதற்காகும். இதனால்தான் அவனை அவர்கள் இந்த கண்ணியமான பெயரைக் கொண்டு அதிகமாக அழைக்கின்றனர்.

இறைவன்- அவன்தான் தலைவன் அவனைப் போன்று யாருமில்லை எதுவுமில்லை அவனுடைய படைப்பினங்களுடைய விடயங்களை சீர்திருத்தக்கூடியவனும் அவர்களுக்கு அவனுடைய அருட்கொடைகளை அள்ளிக் கொடுக்கக்கபடியவனாகவும் உள்ளான். அவன் அரசன் அவனுக்கே படைப்பினங்கள் அனைத்தும் உரியது. சேர்த்து சொல்லும் நிலமைகளிலே அன்றி படைப்பினங்களுக்கு ரப் என்ற வார்த்தை பயன்படுதிதக்கூடாது. உதாரணமாக வீட்டின் உரிமையாளன், செல்வத்தின் உரிமையாளன். சேர்த்து சொல்லாவிட்டால் அதை அல்லாஹ்வுக்கு மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.

இறைவனிடத்தில் மனிதனுக்கு இருக்கும் தேவையை மனிதன் அறிவதற்கு முன் வணங்கப்படக்கூடிய இறைவன் அறிந்து கொள்கிறான். காலம் கடப்பதற்கு முன்பு அவர்களுடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் நாடுகிறார்கள். அல்லாஹ்வுடைய வணக்கக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு அவனுடைய இரட்சித்தல் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தனர். அவனிடம் பிரார்திப்பது மேலும் அவனிடம் உதவி தேடுதல் மேலும் அவன் மீது நம்பிக்கை வைத்து அதிகமான வணக்கங்களை செயதல் மேலும் அவன்பால் ஒதுங்குவது போன்றவையாகும்.

இறட்சித்தல் என்பதற்குள் அதிகமான கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளது அவையாவன- உணவளித்தல், சுகமளித்தல், ஆசிரவதித்தல், கொடுத்தல் போன்றவையாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்{அவனே எனக்கு உணவளித்து (தண்ணீர்) பருகத் தருகிறான் நான் நோயுறும்போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். அவனே என்னை மரணிக்கச் செய்வான். பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான்.}[ஸூரது அஷ் ஷுஅரா79-81].



Tags: